3 1 6
ஏனையவை

அதிகாரத்தை பெறவே மக்களுக்கு வாக்குறுதி! அநுர அரசை சாடிய சஜித் தரப்பு

Share

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காகவே நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் இன்று(18) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் வழங்கிய இந்த ஆணையை ஐக்கிய மக்கள் சக்தி மதிக்கிறது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு வந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதே எதிர்க்கட்சியின் முதன்மை பணியாகும்.

நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லவோ, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவோ, அல்லது குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் செயல்படவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயல்படாது.

ஆனால் அரசாங்கம் தவறான பாதையில் செல்லும் போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

கடன்களை செலுத்தும் இயலுமையை அதிகரிப்பது, வருமான மூலங்களை அதிகரிப்பது, உற்பத்தியை அதிகரிப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, கல்வியை மேம்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது, பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கான தீர்வுகள் ஜனநாயகம் பாதுகாக்கப்படல் போன்ற விடயங்களில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறே, ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த ஆணையை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்குப் பதிலாக தனியொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

எனவே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கினர்.

தமக்கு கிடைத்த கூடிய அதிகாரத்தை முறையாக செயல்படுத்தி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரச நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

விமர்சனங்களுக்கு அப்பால் சென்று, பாராளுமன்ற குழுக்களில் பங்களித்து, வலதுசாரி முகாமின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாத்து, பாராளுமன்றத்தில் அவர்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவோம். ”என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...