திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்
ஏனையவை

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்

Share

திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண்

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தமது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்ற நிலையில், ஏற்பட்ட சுவாரசிய திருப்பம் குறித்து அவரே பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் குடியிருக்கும் ஆர்த்தி மாலா என்ற இந்திய வம்சாவளி பெண் 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்றுள்ளார். கிளாஸ்கோவில் வாடகை டாக்ஸியை அமர்த்திக் கொண்டு திருமணம் நடக்கவிருக்கும் அரங்கிற்கும் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற போது தான் புரிந்து கொண்டார், அது தமது நண்பரின் திருமண அரங்கு அல்ல என்பதை. தனது நண்பர் கவுரவ் என்பவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்த்தி மாலா சனிக்கிழமை கிளாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த அரங்கத்திற்கு சென்ற பின்னர் தான் அந்த விழாவானது கெய்த்லின் மற்றும் ஸ்டீபன் என்பவர்களின் திருமணம் என்று அவர் தெரிந்து கொண்டார்.

சில சடங்குகளை தவறவிட்டதாக
இதனிடையே, விசாரித்ததில் அவரது நண்பரின் திருமணமானது அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள இன்னொரு அரங்கத்தில் நடைபெறுவதாக அறிந்துகொண்டார்.

உடனடியாக அங்கிருந்து இன்னொரு டாக்ஸியில் அந்த அரங்கம் சென்றுள்ளார் ஆர்த்தி மாலா. ஆனால் தாமதமானதால் குறிப்பிட்ட சில சடங்குகளை அவர் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...