துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கைவரிசை!! சிக்கிய திருடர்கள்
இலங்கைஏனையவைசெய்திகள்

துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கைவரிசை!! சிக்கிய திருடர்கள்

Share

துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கைவரிசை!! சிக்கிய திருடர்கள்

கடுவலை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் மனிதவள முகாமையாளரின் வீட்டில் கத்தியை காட்டி கொள்ளையடித்து வீட்டுப் பணிப்பெண்ணிடம் இருந்து சுமார் 1 1/2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கொள்ளையை மேற்கொண்டவர், கொள்ளைக்கு திட்டமிட்டவர் மற்றும் கொள்ளைச் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தவர் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 35 இலட்சம் ரூபா பணத்தில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரூபா, 10950 அமெரிக்க டொலர்கள் மற்றும் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்த பயன்படுத்தப்படாத வெடிகுண்டு அத்துடன் போதைப்பொருட்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த மாதம் 12ம் திகதி நடந்தது.

பணிப்பெண்ணின் கணவனும் குழந்தையும் பல நாட்களாக பணிப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், பணிப்பெண் அவர்களை கிராமத்திற்கு அழைத்துச் செல்ல மஹரகம சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின்னால் வந்து கைகளை கட்டி கொலை மிரட்டல் விடுத்தாக குறித்த பணிப்பெண் அன்றைய தினம் பொலிஸாரிடம் கூறினார்.

பின்னர் குறித்த பணிப்பெண்ணை அழைத்து, வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்கள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு மிரட்டியதாகவும், பணிப்பெண் அந்த இடத்தைக் காட்டியதையடுத்து, கொள்ளையன் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், இந்த கொள்ளையிட்டுச் சென்ற நபர் குறித்த வீட்டின் மேற்கூரையை பலமுறை பழுது பார்க்க வந்தவர் என்பது தெரியவந்துள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...