12 10
ஏனையவை

மகளை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தை : நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு

Share

2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த மகளை சத்தம் போட விடாது தடுக்கும் முகமாக வன்மையான முறையில் தனது தந்தை குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.

திடீரென தான் எழுந்த போது மகளையும் தனது கணவரையும் காணவில்லை எனவும், மதுபோதையில் மகளை தகாத முறைக்கு கணவன் ஈடுபடுத்தியதை தான் கண்டதாகவும், உடனடியாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அழைத்ததையடுத்து பொலிஸார் அதிகாலையில் வீட்டில் வைத்து கைது செய்ததாக சிறுமியின் தாயும் எதிரியின் மனைவியுமான குறித்த பெண் நீதிமன்றில் சாட்சியளித்துள்ளார்.

இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் 10 வயது நிரம்பிய சொந்த மகள் மீது தந்தை மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குவதே பொருத்தம் என தெரிவித்து 10 ஆண்டுகள் கடுழிய சிறையும் 2 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் இரு ஆண்டு கடூழிய சிறை மற்றும் 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நடாத்தி நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை எண்பித்துள்ளார் என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...