அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்
ஏனையவை

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்

Share

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்

அமெரிக்காவின் சியாட்டில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் சியாட்டிலின் ரெய்னியர் கடற்கரை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இளைஞர்களுக்கு மத்தியில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.

இதில் டஜன் டஜனான துப்பாக்கி குண்டுகள் சுட்டு தள்ளப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவுகள், ஆடைகள் மற்றும் பொம்மைகள் வழங்கும் சமூக நலன் கூட்டத்தில் கலந்து கொண்ட 20 வயதுடைய இளைஞர்கள் இடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற 9200 பிளாக் ரெய்னியர் அவென்யூ-க்கு வந்த பொலிஸார், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

இதில் ஒருவர் பலத்த காயங்களுடன் ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இரண்டு ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறிவைத்த நபர்கள் மீது நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக அவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இளைஞர் குழுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...