நேற்று (18) காலை அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தர்கா டவுன், பிரதான வீதியை சேர்ந்த 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவனின் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment