உலகம்ஏனையவைசெய்திகள்

70 வருடங்களாக இயந்திரத்தில் வாழும் மனிதன்

Share
23 64f32d3712c9c
Share

70 வருடங்களாக இயந்திரத்தில் வாழும் மனிதன்

நம்மை ஒரு அறையில் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்.? முதலில் கொஞ்ச நேரம் வருத்தமாக இருக்கும் பிறகு கோபம் வரும். கொஞ்ச நேரம் சலிப்பு ஏற்படும், பின்னர் நம் கோபத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தத் தொடங்குவோம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் பொறுமையை முற்றிலுமாக இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தில் சிக்கிய ஒருவர் உலகில் இருக்கிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்றும் அதே நிலையில் தான் அவர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

இந்த மனிதனின் பெயர் பால் அலெக்சாண்டர். அவர் ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 70 ஆண்டுகளாக இயந்திரத்திற்குள் பூட்டப்பட்டுள்ளார். அந்த இயந்திரத்திற்குள் இருந்தபடியே உணவு மற்றும் பானங்கள் அனைத்தும் எடுத்துக்கொள்கிறார்.

சுவாரஸ்யமாக, இயந்திரத்தில் சிக்கியிருந்தாலும், அவர் பட்டப்படிப்பு படித்தார். புத்தகமும் எழுதினார். ஆனால் இத்தனை வருடங்களாக அந்த நபர் ஏன் இயந்திரத்தில் சிக்கியிருக்கிறார் என்று தெரிந்தால் சிலருக்கு அழுகையே வந்துவிடும். அந்த கண்ணீர் கதையை இங்கு காண்போம்..

இந்த மனிதனின் பெயர் பால் அலெக்சாண்டர். அவருக்கு இப்போது 77 வயதாகிறது. அவர் போலியோ பால் என்றும் அழைக்கப்படுகிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் பால், 1952-ஆம் ஆண்டு அவருக்கு 6 வயதாக இருந்தபோது போலியோவால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் அவரது உடல் முழுவதும் செயலிழந்தது. கழுத்தில் உள்ள பகுதி மட்டும் வேலை செய்கிறது. அவரது உடல் முழுவதும் உயிரற்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை ஒரு இயந்திரத்தில் ஏற்றினர். அதுவே அவரது உயிரைக் காப்பாற்றியது. இந்த இயந்திரத்தின் பெயர் இரும்பு நுரையீரல்.

அறிக்கையின்படி., பாலை இயந்திரத்திலிருந்து வெளியே எடுக்கலாம். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவர் இயந்திரத்திற்குள் தனது வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தார்.

இந்த இரும்பு நுரையீரல் இயந்திரத்தில் மிக நீண்ட காலம் வாழும் நோயாளியாக பால் இப்போது இருக்கிறார். கின்னஸ் உலக சாதனைகளிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

அவரது பராமரிப்புச் செலவுகளுக்காக கடந்த ஆண்டும் நிதி வசூலிக்கப்பட்டது. ஒரு நிதி திரட்டுபவர் அவருக்காக 1 லட்சத்து 32 ஆயிரம் டொலர்களை வசூலித்தார்.

இந்த பரிதாப நிலை இருந்தும் பால் மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். பல ஆண்டுகளாக வழக்கறிஞர் பயிற்சி செய்தார். அதன் பிறகு அவர் தன்னைப் பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதினார். இவை அனைத்தும் அவரை இந்த இயந்திரத்திற்குள் இருந்தபடியே செய்துள்ளார்.

மேலும், வாயால் அற்புதமாக ஓவியம் வரையக் கூடியவர் என்பது இவரின் மிகப்பெரிய சிறப்பு.

தற்போது, ​​அலெக்சாண்டர் கான்ட்ராப்ஷனுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸில் உள்ள ஒரு வசதியில் 24 மணிநேரமும் கவனிப்பு தேவைப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...