4 8 scaled
ஏனையவை

உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு

Share

உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் யூரோவை ஹங்கேரி தடுத்து நிறுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாத கணக்கில் நடைபெற்று வருகிறது, இதில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் அராஜகமான நடவடிக்கையால் அழிவுக்கு உள்ளாகி வரும் உக்ரைனை பாதுகாப்பதற்காக மேற்கத்திய உலகம் தொடர்ந்து ராணுவ மற்றும் நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனின் ராணுவ உதவிக்காக ஒதுக்கிய 500 மில்லியன் யூரோக்களை ஹங்கேரி தடுத்து வைத்துள்ளது.

ஹங்கேரிய நிறுவனங்களை போரின் ஆதரவாளர்களின் பட்டியலில் சேர்க்க மாட்டோம் என்ற உக்ரைனின் வாக்குறுதியை இன்னும் ஹங்கேரி பெறவில்லை என இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஹங்கேரியன் OTP வங்கியை இந்த பட்டியலில் இருந்து உக்ரைன் விலக்கி இருந்தது. ஆனால் இந்த முடிவு நிரந்தரமானதாக வேண்டும் என்பதால் சட்டரீதியான உத்தரவாதங்களை உக்ரைனிடம் இருந்து ஹங்கேரி எதிர்பார்க்கிறது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...