9 35
ஏனையவை

அநுரவிற்கு முன்னரே இந்தியா விரையும் ரணில்

Share

அநுரவிற்கு முன்னரே இந்தியா விரையும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு (India) விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயமானது, இன்று (21) ்மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் போது, ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றையும் நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை (22 ஆம் திகதி) மாலை 6 மணிக்கு மேல்நிலைக் கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கும் இந்த விரிவுரை நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...