5 45
ஏனையவை

சவுதி கட்டப்போகும் பிரமாண்ட உலககிண்ண கால்பந்தாட்ட மைதானம் : வெளியானது மாதிரி

Share

சவுதி கட்டப்போகும் பிரமாண்ட உலககிண்ண கால்பந்தாட்ட மைதானம் : வெளியானது மாதிரி

2034ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக சவுதி அரேபியாவில் கட்டப்படும் புதிய கால்பந்து மைதானத்தின் மாதிரி திட்டம் நேற்று(18) முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்த மைதானம் 2029ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2034 FIFA உலகக் கோப்பையை நடத்த சவுதி அரேபியா(saudi arabia) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், 2023 ஆம் ஆண்டுக்கான காலக்கெடுவிற்கு முன்னதாக, நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தை முறையாகச் சமர்ப்பித்த ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே.

போட்டிகள் நடைபெறும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 48 அணிகள் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2034 பிஃபா உலகக் கோப்பை சவுதி அரேபியாவில் 15 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை குறிவைத்து ரியாத் நகரில் புதிய மைதானம் கட்ட சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மைதானத்தின் திட்டம் குறித்த காணொளி நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

92 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் கட்டப்படவுள்ளது. விளையாட்டு வளாகம் மைதானத்தின் உட்புற அரங்கையும், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளத்தையும் சுற்றியுள்ள பசுமையான நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...