15 9
ஏனையவை

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

Share

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி ஹலேவி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லா எனும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய குழு, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருவதுடன், இஸ்ரேலும் பதிலுக்கு லெபனானில் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லாவானது, ஹமாஸ் போன்ற சிறிய குழுவில்லை, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் இது மிகப்பெரிய குழுவாகும்.

தற்போது இஸ்ரேல் இந்த குழுவை குறி வைத்து போரை நீடித்து வருவதுடன், கடந்த மூன்று மாதங்களாக லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3,300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...

10 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வெற்றிடமாகவுள்ள, மூன்று வேலைப் பிரிவுகளுக்கான பதிவு இன்று(27) அதிகார பூர்வமாக ஆரம்பமாகும்...