5 34
ஏனையவை

மூத்த தமிழ் கட்சிகளின் பாரிய தோல்வி : காரணத்தை உடைத்த மக்கள்

Share

மூத்த தமிழ் கட்சிகளின் பாரிய தோல்வி : காரணத்தை உடைத்த மக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான ஜே.வி.பி பாரிய வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

பாரம்பரியமாக அரசியலில் இருந்த மூத்த அரசியல்வாதிகள் பலரின் அரசியல் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டு புதிய அரசாங்க முறைமை உருவாக்கப்பட்டமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழர் பிரதேசங்களிலும் மக்களின் வாக்குகளானது பாரம்பரிய தமிழ்கட்சிகளை விடுத்து அநுரவின் கட்சியை நோக்கி நகர்ந்துள்ளமை தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் மற்றும் தமிழ் அரசியல் சமூகத்திலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள மக்கள் “50 வருடக்காலம் நடந்த அரசியல் கலாச்சாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

ஏற்கனவே, ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியின் வெளிபாடுதான் தற்போது வந்துள்ள மாற்றம்.

நேர்மையாக அரசியல் நடத்தினால் மாத்திரமே அரசியல் அதிகாரம் எதிர்காலத்தில் உண்டு என்பதை அரசியல்வாதிகளுக்கு நினைவுவூட்டியுள்ளளோம்.

இவ்வளவு காலம் தொடர்ந்த இன மற்றும் மத வேறுப்பாட்டிலான அரசியலை தகர்த்தி இனி வரும் காலங்களில் ஒற்றுமையாக வயோதிப அரசியல்வாதிகளை நீக்கி இளைஞர்களுக்கான வாய்ப்பை வழங்க தகுந்த சூழலை ஏற்படுத்தியுள்ளளோம்.

14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வாத ஜனாதிபதி தெரிவித்திருந்தார் அதே போல தற்போது அவர் அதை நடத்திக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தமிழ் பிரதேசங்களின் மூத்த தமிழ் கட்சிகளின் பிளவும் மற்றும் ஒற்றுமையின்மையே நாங்கள் மாற்றத்தை தேட காரணம்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எதிர்பாத்தது மாற்றம் அந்த மாற்றத்தை நாட்டின் மக்களாக நாங்கள் ஏற்படித்தியுள்ளதுடன் இனி அபிவிருத்தயை நோக்கி பயணிப்போம் என நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...