24 6642f90c0d274
ஏனையவை

அப்போ சூப்பர்ஸ்டார், இப்போ தளபதி.. பிரபல இயக்குனர் கூறிய விஷயம், என்ன தெரியுமா

Share

அப்போ சூப்பர்ஸ்டார், இப்போ தளபதி.. பிரபல இயக்குனர் கூறிய விஷயம், என்ன தெரியுமா

ரஜினிக்கு பின் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு தொடர்ந்து பல இடங்களில் பேசப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் கூட சமூக வலைத்தளத்தில் எழுந்தது.

ஆனால், ரஜினிகாந்த் எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை என கூறி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதே போல் விஜய்யும், சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என கூறியது அனைத்திற்கும் முடிவாக அமைந்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் ரஜினியின் அருணாச்சலம் படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள அரண்மனை 4.

இப்படத்தின் ப்ரோமோ விழாவில் கலந்துகொண்ட சுந்தர் சி-யிடம் அருணாச்சலம் படத்தில் இப்போது யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு “கண்டிப்பாக விஜய் தான். அப்போது சூப்பர்ஸ்டார் என்றால் இப்போ தளபதி” என கூறினார் சுந்தர் சி. இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...