24 661ba1aff02f0 md
சினிமாசெய்திகள்

மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா.. ரொமான்டிக் இயக்குனருடன் முதல் முறை கூட்டணி

Share

மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா.. ரொமான்டிக் இயக்குனருடன் முதல் முறை கூட்டணி

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.

இவர் கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நயன்தாராவின் புதிய படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 72 வயதிலும் இளம் ஹீரோ போல் மலையாளத்தில் கலக்கிக்கொண்டு இருப்பவர் மம்மூட்டி. இவருடன் நயன்தாரா இதற்கு முன் மலையாளத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் மம்மூட்டி உடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் நயன். இப்படத்தை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்களுக்கு பேர்போன இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கவுள்ளாராம்.

இதுவரை கவுதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா நடித்ததே இல்லை. இப்படம் உறுதி செய்யப்பட்டால் இதுவே கவுதம் மேனன் உடன் நயன்தாரா இணையும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...