24 663850f2bd91b
ஏனையவை

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை

Share

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை

இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்குக் காட்டிக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்குரிய ஏற்பாடுகளும் இரகிசயமாக இடம்பெறுகின்றன என்று உத்தர லங்கா சபாகயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்க மக்கள் உத்தர லங்கா சபாகயவுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் விமல் வீரவன்ச எம்.பி. மேலும் கூறியதாவது,

இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருளாதார கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை விற்பனை செய்யும் நிலை காணப்படுகின்றது

இலங்கை மின்சார சபையை 12 கூறுகளாகப் பிரித்து இந்திய நிறுவனங்களுக்கு விற்பதற்குத் தயாராகின்றனர். இலங்கையையும், இந்தியாவையும் இணைப்பதற்குரிய பாதை பற்றியும் பேசப்படுகின்றது.

விமான நிலையங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும்.

அதேபோல இலங்கை மற்றும் இந்திய சுங்கங்களை இணைப்பதற்குரிய சாத்தியம் பற்றியும் பேசப்படுகின்றது. இவ்வாறு இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

இது நாட்டின் இறையாண்மையைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எட்கா உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் கோரப்பட்டாலும் அவை வழங்கப்படுவதில்லை. இரகசியமான முறையில் உள்ளடக்கங்கள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...