India Hindu Temple 28921
ஏனையவை

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

Share

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

RAF, ATS, மத்திய படைகள் மற்றும் உ.பி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மொழித் திறன் கொண்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டத்தை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிகின்றனர். தரம்பத், ரம்பத் ஹனுமான் கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் தெருக்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படை (ATS) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத பூகம்பங்களைச் சமாளிக்க பல தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF), SDRF பயன்படுத்தப்படுகின்றன.

உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) பணியாளர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இரண்டு NSG குழுக்களின் ஸ்னைப்பர்கள் கூரைகள் மற்றும் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பல சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிப்போக்கர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அயோத்தி மாவட்டம் சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டலத்தில் உள்ளது. சரயு நதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான போக்குவரத்தை திசை திருப்பவும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Share
தொடர்புடையது
25 68f5bb1f9b4cc
ஏனையவை

மாகாண சபை தேர்தல் முறை பற்றி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்:நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர்...

1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...