1 4 scaled
ஏனையவை

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கலாம்… ஜேர்மனி அச்சம்: கசிந்த ஆவணங்கள்

Share

ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், ரஷ்யா அடுத்த ஆண்டு நேட்டோ கூட்டணி நாடுகள் மீது தாக்குதலை விரிவாக்கலாம் என்றும், அதனால், மூன்றாம் உலகப்போர் துவங்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் ஜேர்மனி கருதுவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் செய்தித்தாளான Bild செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் நேட்டோ மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், பிரச்சினை விரைவில் பெரிதாகலாம் என்றும், ஆகவே, பல்லாயிரக்கணக்கான ஜேர்மன் வீரர்கள் போர்க்களத்துக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே 31 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் நேட்டோ போர்ப்பயிற்சி ஒன்றிற்காக பிரித்தானியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை தயாராக்கிவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...