ஏனையவை

உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு

Share
4 8 scaled
Share

உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் யூரோவை ஹங்கேரி தடுத்து நிறுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாத கணக்கில் நடைபெற்று வருகிறது, இதில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் அராஜகமான நடவடிக்கையால் அழிவுக்கு உள்ளாகி வரும் உக்ரைனை பாதுகாப்பதற்காக மேற்கத்திய உலகம் தொடர்ந்து ராணுவ மற்றும் நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனின் ராணுவ உதவிக்காக ஒதுக்கிய 500 மில்லியன் யூரோக்களை ஹங்கேரி தடுத்து வைத்துள்ளது.

ஹங்கேரிய நிறுவனங்களை போரின் ஆதரவாளர்களின் பட்டியலில் சேர்க்க மாட்டோம் என்ற உக்ரைனின் வாக்குறுதியை இன்னும் ஹங்கேரி பெறவில்லை என இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஹங்கேரியன் OTP வங்கியை இந்த பட்டியலில் இருந்து உக்ரைன் விலக்கி இருந்தது. ஆனால் இந்த முடிவு நிரந்தரமானதாக வேண்டும் என்பதால் சட்டரீதியான உத்தரவாதங்களை உக்ரைனிடம் இருந்து ஹங்கேரி எதிர்பார்க்கிறது.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...