ஏனையவை

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?

Share

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?
Vijay tv, news, current news, bigg boss 7

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் துவங்கியது. முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தன்னுடைய உடல் நலனை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறினார். பின்னர் பிக் பாஸ் தரப்பில் இருந்து இவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கடைசியில் உடல்நிலை காரணமாக அவரை வெளியேற்றுவதாக பிக் பாஸும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களைத் கவர முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது.

ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில், இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வௌயேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் பவா செல்லத்துரை தானாக வெளியேறியதால் யாரும் வெளியேறப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை எப்பிஷோட்டில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...