2a7fc2b5 53043090909 8cdb1ae85c o 1 scaled
ஏனையவை

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

Share

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மவுசு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அவர் வரும் தேர்தலில் தோல்வியடைந்தால், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

2025இல் ரிஷி பிரதமராக இருக்கமாட்டார்
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுமானால், அதற்குப் பின் ரிஷி பிரித்தானியாவின் பிரதமராக இருக்கமாட்டார் என நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லேபர் கட்சி பிரித்தானியாவில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

அடுத்த பிரதமர் போட்டியில் 13 பேர்
இதற்கிடையில், ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் வேலை நடப்பதாகவும், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர், அவரது கட்சியினரே, உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அவ்வகையில், ரிஷிக்கு பதிலாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் முதல் நபர், கெமி பேடனாக். கட்சியில் மிகவும் பிரபலமான அமைச்சர் அவர்தான் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு அடுத்தபடியாக அடிபடும் பெயர் லிஸ் ட்ரஸ். அவரைத் தொடர்ந்து, கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகள் கொண்டவரான உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், வெளியுறவுச் செயலரான James Cleverly, Penny Mordaunt, Tom Tugendhat, Grant Shapps, Michael Gove, Priti Patel, Jacob Rees-Mogg, Gillian Keegan, Claire Coutinho, David Fros ஆகியோர் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...