tamilni 259 scaled
ஏனையவை

நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை! முரளிதரன்

Share

நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை! முரளிதரன்

தான் மலையகத்தில் வாழ்ந்த மலையகத்தவர் என்பதனால் ‘800’ திரைப்படம் முற்றுமுழுதாக மலையக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றினை மாத்திரமே உள்ளடக்கியுள்ளதே தவிர தான் ஈழத்தில் கால் பதிக்கவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

‘800’ திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் உள்ளடக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது பெற்றோர் மலையகத்தினை சேர்ந்தவர்கள். நான் மலையகத்தில் பிறந்து வாழ்ந்த மலையகத்தவர் தான்.நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை. ஈழத்தில் நடந்தவற்றினை நான் பார்க்கவில்லை. ஈழத்திற்கு சாதாரண மனிதர்களை போல சுற்றுலாவிற்கு மாத்திரமே சென்று வந்திருக்கின்றேன்.

எனவே நான் பார்த்த எனது வாழ்க்கையில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரமே 800 திரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

யுத்தம் என்பது அரசியல் சாதாரண கிரிக்கெட் வீரரான என்னால் அரசியல் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது. நான் கருத்து தெரிவிப்பதினால் எதுவும் மாறப்போவதில்லை. நான் எனது குடும்பம், தொழில், வாழ்க்கை என்று வாழும் சாதாரண மனிதன் என்றும் பதிலளித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...