7 9 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

புலம்பெயர் மக்களை எல்லையில் கொன்று குவிக்கும் மத்திய கிழக்கு நாடு

Share

ஏமன் எல்லையில் புலம்பெயர் மக்களை சவுதி அரேபிய எல்லைக் காவலர்கள் இரக்கமின்றி பெருமளவில் கொன்று தள்ளியதாக பகீர் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஏமனைக் கடந்து சவுதி அரேபியாவை அடையச் சென்ற எத்தியோப்பிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் தப்பிய புலம்பெயர் மக்களில் பலர், வழியெங்கும் சடலங்களை பார்க்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர் மக்களை ஏமன் எல்லையில் சவுதி அரேபியா வேட்டையாடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முன்பு அந்த நாடு மறுத்து வந்தது.

இந்த நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பு இந்த விவகாரம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் மீது மழை போன்று துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவுடனான யேமனின் ஆபத்தான வடக்கு எல்லையில் சவுதி காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்தே கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

காயங்களுடன் தப்பிய 21 வயதான முஸ்தபா சௌபியா முகமது என்ற இளைஞர் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தம்முடன் எல்லையை கடக்க முயன்ற குழுவினரில் கொத்தாக 45 பேர்கள் சவுதி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.

3 மாதங்கள் பயணித்து கடும் போராட்டங்களுக்கு பின்னர் எல்லையை நெருங்கிய நிலையில், சவுதி அரேபிய எல்லைக்காவலர்கள் கண்மூடித்தனமாக சுட்டதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதான இளம்பெண் ஒருவர் சுமார் 1950 பவுண்டுகள் கடத்தல்காரர்களுக்கு செலவிட்டு ஏமன் எல்லையை அடைந்ததாகவும், ஆனால் துப்பாக்கி குண்டுகளை எதிகொள்ள நேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒற்றை துப்பாக்கி குண்டால் தனது ஒரு கையில் மொத்த விரல்களும் சிதறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்பு ஒன்று தெரிவிக்கையில்,

கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆண்டுக்கு 200,000 மக்கள் சவுதி அரேபியாவில் நுழையும் பொருட்டு ஏமன் எல்லையை கடப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நெருக்கடியான பயணத்தில் பலர் சிறைபிடிக்கப்படுவதுடன், கடுமையான தாக்குதலுக்கும் இலக்காகின்றனர்.

புலம்பெயர் மக்களின் முக்கிய பாதையாக கருதப்படும் ஏமனில் பயணத்தின் இடையே இறந்தவர்களின் கல்லறைகள் தான் நிரம்பியுள்ளதாக கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...