7 1 scaled
ஏனையவை

வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி

Share

வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி

ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும் என ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் சில பகுதிகளில், குறிப்பாக பவேரியா மாகாணத்தில், Alternative for Germany (AfD) என்னும் வலதுசாரிக் கட்சிக்கு வரலாறு காணாத அளவில் ஆதரவு அதிகரித்துவருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த AfD கட்சியினர் இனவெறுப்பாளர்கள் என பெயரெடுத்தவர்கள். ஜேர்மானியரல்லாத வெளிநாட்டினர் என்று தெரிந்தாலே அவர்கள் மீது வெறுப்பு காட்டுபவர்கள் இந்த கட்சியினர். புலம்பெயர்ந்தோரையும் சிறுபான்மையினரையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்நிலையில், பவேரியாவில் உள்ளூர் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பவேரியாவில் AfD கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெளிப்படையாகவே வெளிநாட்டவர்களை விமர்சிக்கிறார்.

மருத்துவமனைகள், பள்ளிகள் என எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் அவர், வெளிநாட்டவர்களை ஜேர்மனியிலிருந்து வெளியேற்றவேண்டும்.

ஜேர்மனியை வெளிநாட்டவர்களிடமிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகள் முழுவதும் ஜேர்மன் மொழி பேசாத வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் நம் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்கும் என்கிறார் அவர்.

ஆனாலும், இப்படி புலம்பெயர்தலை, வெளிநாட்டவர்களை எதிர்க்கும் AfD கட்சிக்கு எல்லோரும் ஆதரவு தரவில்லை. அதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும், அக்கட்சிக்கு ஆதரவு பெருகிவருவதால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என புலம்பெயர்ந்தோர் அச்சமடைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

Share

1 Comment

தொடர்புடையது
images
ஏனையவைஇந்தியாசெய்திகள்

இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை...

16 7
ஏனையவை

நடிகை பூஜா ஹெக்டே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தரியா.. அடேங்கப்பா!!

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்திய சினிமாவில் தனக்கென்று...

14 7
ஏனையவை

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் அதிரடி பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

1 9
ஏனையவை

ஸ்டாலினின் அரசியல் நாடகம்.. கச்சத்தீவு ஒரு சாக்கு.. அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன்...