R
இலங்கைஏனையவை

ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க

Share

ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ​போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் வௌிநாடுகளுக்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளார். எனினும் அதன் மூலம் நாட்டின் கடன் நிலுவைத் தொகைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ எதுவித நன்மையும் கிட்டவில்லை.

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குப் பதில் தற்காலிக ஒட்டு போடப்பட்ட அரசாங்கமொன்று அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.R

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

23 650582b658069
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சோகம்: காணாமல் போன 24 வயது இளைஞன் தோட்டக் கிணற்றில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முதல் காணாமல் போயிருந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று...

Diana Gamage 400x240 1
செய்திகள்இலங்கை

டயானா கமகேவுக்கு எதிரான கடவுச்சீட்டு மோசடி வழக்கு: பிப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றமை மற்றும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள்...

04 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் இணையும் தமிழ்த் தேசியக் கட்சிகள்: நிபந்தனையற்ற இணைப்புக்குத் தயார் என அறிவிப்பு!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது, எந்தவித நிபந்தனைகளும் இன்றி மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து...