காலி, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை, கலபொட பகுதியில் உள்ள சுனாமிவத்த என்ற இடத்திலுள்ள வீடொன்றில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
குறித்த வீட்டில் விருந்துபசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் திடீரெனத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 28 வயதுடைய இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தனிப்பட்ட பகை அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.