MediaFile 1 2
ஏனையவை

யாழ் – பண்ணைக் கடலில் சோகம்: நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பண்ணைக் கடலில் நால்வர் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்கள் திடீரெனச் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாரின் உதவியுடன் நீரில் மூழ்கிய நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனர்த்த நிலைமைகள் தணிந்திருந்தாலும், கரையோரப் பகுதிகளில் நிலவும் அபாயங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
DSC 4424
ஏனையவை

சிவனொளிபாதமலைக்கு ஹட்டன் வழியாகப் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு (Sri Pada/Adam’s Peak) செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள...

images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...