ஏனையவை

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?

Share

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?
Vijay tv, news, current news, bigg boss 7

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் துவங்கியது. முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தன்னுடைய உடல் நலனை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறினார். பின்னர் பிக் பாஸ் தரப்பில் இருந்து இவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கடைசியில் உடல்நிலை காரணமாக அவரை வெளியேற்றுவதாக பிக் பாஸும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களைத் கவர முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது.

ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில், இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வௌயேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் பவா செல்லத்துரை தானாக வெளியேறியதால் யாரும் வெளியேறப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை எப்பிஷோட்டில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...