6 38
ஏனையவை

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

Share

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை தான்.

நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது நேற்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடித்தான் திரைப்படத்தின் சிறுகாட்சி இடம்பெற்றிருந்தது.

அந்த சின்ன வீடியோவிற்காக தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் பழிவாங்குகிறார் என நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார்.

தனுஷ்-நயன்தாரா பிரச்சனை குறித்து பலரும் பேசிவர அண்மையில் ஆர்.ஜே.பாலாஜிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம் என்பதுபோல ஏதோ ஒன்று நடக்கிறது.

அனைவரும் பார்க்கிறோம், அதைப்பற்றி பேசுகிறோம். இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை, தனுஷே அதற்கு பதில் சொல்லவில்லை, நாம் என்ன சொல்ல, அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...