ஏனையவை

தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி : தீவிர தேடுதலில் காவல்துறை

Share

தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி : தீவிர தேடுதலில் காவல்துறை
Trincomalee,
Sri Lanka Police Investigation,
Israel,
Israeli Tourist Missing In Trincomalee
இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த இஸ்ரேலிய(israel) யுவதி கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ளநிலையில் உப்புவெளி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

25 வயதான தாமர் அமிதாய் என்ற இளம் யுவதியே காணாமற் போனவராவார்.

கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு வந்த அவர், திருகோணமலை(trincomale) பகுதியில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார்.

அவர் ஒன்லைனில் விருந்தினர் விடுதிக்கான முன்பதிவு செய்து திருகோணமலையில் உள்ள றொலக்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த புதன்கிழமை (26) முதல் விடுதிக்கு திரும்பவில்லை என்றும் விருந்தினர் விடுதி உரிமையாளர் கூறினார்.

இது குறித்து விருந்தினர் விடுதி உரிமையாளர் உப்புவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) தெரிவித்தார்.

அமிதாய் தனது உடமைகளை விடுதியில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

மேக்னஸ் இன்டர்நஷனல் சேர்ச் அண்ட் ரெஸ்க்யூ,(Magnus International Search and Rescue) சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய எந்த தகவலையும் தேடி ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளது. தகவல் தெரிந்தவர்கள் +972508899698 (WhatsApp) அல்லது sar@magnus.co.il ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01ke937mtdxb7xrchhekg0a7eyimgname sonia gandhi admitted ganga ram hospital delhi pollution health update 2 1767684428621
ஏனையவை

இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: டெல்லியில் தீவிர சிகிச்சை!

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, திடீர்...

MediaFile 1 3
ஏனையவை

சுற்றுலாப் பயணிகளுக்கான இலத்திரனியல் பயண அனுமதி திட்டம்: மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும்!

இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான இலத்திரனியல் பயண அனுமதி (Electronic Travel Authorization...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...

images 5 3
இலங்கைஏனையவைசெய்திகள்

மனிதக் கடத்தலை ஒழிக்க இலங்கையின் புதிய வியூகம்: 2026 – 2030 தேசிய மூலோபாயத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் பலமோர் பணிச்சட்டகத்தின் (Palermo...