4 25
ஏனையவை

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

Share

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த இல்லங்கள் தொடர்பில் அமைச்சரவையில் முடிவொன்றை எடுக்க பொது நிர்வாக அமைச்சுகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மற்றும் அதன் மேலதிக செயலாளர் ஜானக ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நேற்று (13) கையளிக்கப்பட்ட அமைச்சர் இல்லங்களை பார்வையிட்டுள்ளனர்.

இல்லங்களை ஆய்வு செய்த பின்னர், அவற்றின் பாதுகாப்புக்காக மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 28 இல்லங்களும் அரசாங்கத்திடம் நேற்றையதினம் (13) கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...