மீண்டும் சந்தர்ப்பம் – அரசு ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
மீண்டும் சந்தர்ப்பம் – அரசு ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
Election Commission of Sri Lanka,
srilanka election 2024,
srilanka presidential election 2024,
sriLankaelectionupdates,
Another Opportunity For Postal Voting Gov Servants
ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.09 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,223 என ஆணைக்குழு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.