மருத்துவம்
பால் குடிப்பதற்கு முன்பு இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்க.. இல்லைனா இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்
![பால் குடிப்பதற்கு முன்பு இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்க.. இல்லைனா இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம் 3 istockphoto 1181607373 612x612 1](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2022/07/istockphoto-1181607373-612x612-1.jpg?lossy=2&strip=1&webp=1)
பொதுவாக பாலில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானவைதான் ஆனால் பால் பருகுவதற்கு சற்று முன்பு சில உணவுகளை தவிர்க்கவேண்டும்.
ஏனெனில் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதா இருக்கும். தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு பால் பருகினால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் கழித்துதான் பால் பருக வேண்டும்.
- பாலையும், உளுந்தம் பருப்பு உணவுகளையும் ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு ஏற்றதல்ல. அதனால் வயிற்று வலி, வாந்தி உருவாகும். உடல் பருமனும் ஏற்படும்.
- பாகற்காய், வெண்டைக்காய் போன்றவைகளை சாப்பிட்ட உடன் பால் பருகினால், முகத்தில் கறுப்பு புள்ளிகள் தோன்றக்கூடும்.
- முள்ளங்கி – பெர்ரி இவைகளை சாப்பிட்ட பிறகும் உடனடியாக பால் உட்கொள்ளக் கூடாது. உட்கொண்டால் சரும பாதிப்புகள் உருவாகலாம்.
- மீன் சாப்பிட்டதும் பால் பருகினால் செரிமானம் பாதிக்கும். வயிற்றுவலி, சருமத்தில் வெண் புள்ளிகள் ஏற்படவும் செய்யும்.
#LifeStyle
You must be logged in to post a comment Login