covid vaccine new
மருத்துவம்இந்தியாசெய்திகள்

ஒமைக்ரானுக்கு எதிராக வீரியமாக செயல்படும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி

Share

பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், அதன் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தடுப்பூசியின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வகையில், அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான வேக்சேவ்ரியா தடுப்பூசி, ஒமைக்ரானுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியை 3வது தவணை பூஸ்டர் டோசாக செலுத்தியபிறகு, ஒமைக்ரானுக்கு எதிராக, அதிக ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கிறது.

மேலும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்ட பிறகுஇ கொரோனாவின் பீட்டா, டெல்டா,ஆல்பா மற்றும் காமா மாடுபாடுகளுக்கு எதிராகவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டறியப்பட்டுள்ளது என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கூறி உள்ளது.

மூன்றாவது டோஸ் பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டுஇ இந்த கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தைஇ புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

இந்த புதிய ஆய்வு முடிவுகள் ஊக்கம் அளிக்கும் செய்தி என சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவின் தலைமை ஆய்வாளரும் இயக்குநருமான பேராசிரியர் சர் ஆண்ட்ரூ ஜே பொல்லார்டின் கருத்துப்படிஇ தற்போது நடைபெற்று வரும் அஸ்ட்ராஜெனேகா / ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனைகளின் புதிய தரவு, ஒமைக்ரானுக்கு எதிராக மூன்று டோஸ்கள் நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது ஊக்கமளிக்கும் செய்தி’ என அதார் பூனவல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

#indianews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...