ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்....
பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்களும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சராக இன்று மாலை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில்...
” இவ் வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். ” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ராஜபக்சக்கள் இல்லாத, இளம்...
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி...
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும்...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதியால், மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுதினம் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அறியமுடிகின்றது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் அறிவிப்பையே அவர் இவ்வாறு வெளியிடுவார் என தெரியவருகின்றது. இடைக்கால சர்வகட்சி அரசுக்கு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம்...
புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு, எதிரணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மகா சங்கத்தினர் இறங்கியுள்ளனர். புதிய பிரமரின்கீழ்தான் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற...
” சர்வகட்சி அரசமைப்பதற்கு வழிவிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.” இவ்வாறு சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச்...
“நாட்டுக்காக பிரதமர் பதவியை துறப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார். எனினும், அந்த முடிவை எடுப்பதற்கு பிரதமருக்கு சிலர் தடையாக உள்ளனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ” – இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
” நான் பதவி விலக தயார். அதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அதன் பின்னர் என்ன நடக்கும்? புதிய பிரதமர் யார், முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் எவை என்பன தொடர்பில் வேலைத்திட்டமொன்று அவசியம். அது உருவாக்கப்படுமானால்...
” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது.” – என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார். ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும்....
நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமர், அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரி மாளிகையில் இன்று முற்பகல் முக்கிய...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். பிரதமர், அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு...
” இடைக்கால சர்வக்கட்சி அரசில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமர் பதவியை வகிப்பார். இது தொடர்பான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. புதிய பிரதமரின் பெயரை முன்கூட்டியே வெளியிட முடியாது.” இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர்...
இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று மொட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’...
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என்று பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான...