நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு...
கோட்டா கோ கமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #SriLankaNews
கொழும்பு காலிமுகத் திடல் “கோட்டா கோ கம’வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். நள்ளிரவைத் தாண்டியதும் அதிகாலை 1.00 மணியளவில் படை நடவடிக்கை...
” நாடாளுமன்ற சூழச்சிமூலமே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம். ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும்வரை போராட்டம் தொடரும்.” இவ்வாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று (20) திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் , சபாநாயகருக்கு கிடைத்துவிட்டதென அதிகாரப்பூர்வ தகவல் வெளியான கையோடு, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முகாமிட்டிருந்த போராளிகள் உள்ளிட்ட மக்கள் பெருமெடுப்பில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு கொளுத்தி, வாண...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர், அதிரடியாக சினிமா பாணியில் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த,...
கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் இரண்டாவது தடவையாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினரை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 80ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காலி முகத்திடல் வளாகத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடைபெறும் இப்போராட்டத்தில் நேற்றைய தினமும் பலர்...
காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று விமல் வீரவன்ச எம் பி. சபையில் நேற்று கடுமையாக...
காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். சமகாலநிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 49 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இப்போராட்டத்துக்கு நேற்றைய தினமும் பலர் ஆதரவு வழங்கியிருந்தனர். ‘கோட்டா கோ ஹோம்’...
” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளமையானது, இன ஐக்கியத்தின் சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புகின்றேன். அதேபோல தேசிய இனப் பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அப்போது இந்நாடு...
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று மாலையும் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கோட்டா கோ கம’வில் இன்று காலை...
கொழும்பு – காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை நகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ உள்ளிட்ட மேலும் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்...
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கொழும்பு – காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் கூடியிருக்கும் இளைஞர்களும், யுவதிகளும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க முடியாது என்று பொலிஸார் ஒலிபெருக்கி மூலம்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டம் நாளை காலை 8 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டிருந்த மக்கள் மீது பொலிஸார் முன்னிலையில் தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக்...
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது....
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிரணி அரசியல் பிரமுகர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தற்போது களமிறங்கியுள்ளனர். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு இன்று நுழைந்த அரச ஆதரவாளர்கள்,...
நாளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும்...