ஓகஸ்ட் மாதத்தில் 1,717 அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செப்டெம்பர் மாதத்துக்குள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது நாட்டின் கையிருப்பில் 3.5% உயர்வாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள...
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் சஜித் கூறியவை வருமூறு, “சபாநாயகர் , உங்கள்...
பொதுமக்கள் தம்வசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதி அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்தச் சலுகை...
நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய...
” நாட்டில் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு படுகுழிக்குள் விழும் அபாயம் உள்ளது.” இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்...
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தடை ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன்...
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு...
இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு தொடர்பில் மத்தியவங்கி அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் வசிக்கும் ஒருவர், வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலரில் இருந்து 10,000 அமெரிக்க டொலராக குறைக்க...
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை விலையானது நேற்றைய தினம் 380 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 15 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இதேவேளை,...
2021 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை நாணய சபையால் 29.04.2022 ஆம் திகதி நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்யஉள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசுக்கு எதிரான போராட்டங்கள்...
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாகக் கைவிடுமாறு அரசுக்கு, இலங்கை மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. சுமார் ஓராண்டு வரை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது. அரசால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு...
அரசு வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால், நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பிரிவினருக்கும்,...
சந்தையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக மியன்மாரில் இருந்து 100,000 மெற்றிக் தொன் வெள்ளை அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. ஒரே தடவையில் 20,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து...
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. நிலையான வைப்பு வசதி விகிதம் 5.50 சதவீதமாகவும், நிலையான...
கடந்த வருடம் பணம் அச்சிடப்பட்டமையாலேயே நாடு நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைத்தது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் .தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய...
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய...
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் , இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை...