116511320 indoncavepig
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு! 67,800 ஆண்டுகள் பழமை!

Share

மனித நாகரிகத்தின் தொடக்ககால கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில், உலகின் மிகப்பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் கடற்கரையோரம் அமைந்துள்ள முனா தீவில் (Muna Island) உள்ள ஒரு சுண்ணாம்புக் குகையில் இந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குகை சுவரில் சிவப்பு நிறப் பாறை நிறமிகளைக் கொண்டு மனிதக் கைகளின் அச்சுக்கள் (Hand Stencils) பதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பறவைகளின் தலை மற்றும் விலங்குகளின் உடலமைப்பைக் கொண்ட விசித்திரமான மனித உருவங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுவரை ஸ்பெயினில் கண்டறியப்பட்ட 66,700 ஆண்டுகள் பழமையான ‘நியண்டர்தால்’ கை அச்சுகளே உலகின் மிகப்பழமையானதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது இந்தோனேசியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த ஓவியம், அதைவிட சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என்பதால், மனித குலத்தின் கலை வரலாறு ஆசியாவிலிருந்தே தொடங்கியிருக்கலாம் என்ற புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி அல்லது ஊதி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில கை விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் வேண்டுமென்றே மாற்றியமைக்கப்பட்டுள்ளமை அன்றைய மனிதர்களின் தனித்துவமான கலை உணர்வைக் காட்டுகிறது.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...