5 22
உலகம்செய்திகள்

ரஷ்யா மீது கடுமையான அழுத்தம்.. முக்கிய தலைவர்களுடன் பேசிய ஜெலென்ஸ்கி

Share

போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குறித்து, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஸ்டார்மர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரஷ்யா மீது கடுமையான அழுத்தம் பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பதிவில், “பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ், பிரதமர்கள் ஸ்டார்மர் மற்றும் டஸ்க் ஆகியோருடன் பேசினோம்.

இதன்போது, இஸ்தான்புல்லில் நடந்த சந்திப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம்.

உண்மையான அமைதியைக் கொண்டுவர உக்ரைன் விரைவான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளது, மேலும் உலகம் ஒரு வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது முக்கியம்.

ரஷ்யர்கள் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தையும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியையும் நிராகரித்தால், கடுமையான தடைகள் பின்பற்றப்பட வேண்டும்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாராகும் வரை ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...