5 22
உலகம்செய்திகள்

ரஷ்யா மீது கடுமையான அழுத்தம்.. முக்கிய தலைவர்களுடன் பேசிய ஜெலென்ஸ்கி

Share

போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குறித்து, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஸ்டார்மர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரஷ்யா மீது கடுமையான அழுத்தம் பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பதிவில், “பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ், பிரதமர்கள் ஸ்டார்மர் மற்றும் டஸ்க் ஆகியோருடன் பேசினோம்.

இதன்போது, இஸ்தான்புல்லில் நடந்த சந்திப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம்.

உண்மையான அமைதியைக் கொண்டுவர உக்ரைன் விரைவான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளது, மேலும் உலகம் ஒரு வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது முக்கியம்.

ரஷ்யர்கள் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தையும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியையும் நிராகரித்தால், கடுமையான தடைகள் பின்பற்றப்பட வேண்டும்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாராகும் வரை ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...