2 32
உலகம்செய்திகள்

மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம்… எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி

Share

மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம்… எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொத்தமாக நம்புவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைனை பலியாடாக விட்டுக்கொடுத்து போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையிலேயே, மேற்கத்திய நாடுகள் புடினை நம்ப வேண்டாம் என ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

போர் நிறுத்தம் செய்ய தாம் தயாரென புடின் கூறுவதை உலகத் தலைவர்கள் நம்ப வேண்டாம் என்று தாம் எச்சரித்து வருவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் தொலைபேசியில் விவாதித்ததன் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில்,

உக்ரைன் வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன், வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன் என்றார்.

இதனிடையே, மூன்று வருட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை இரவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் 90 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய பிறகு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடனடி பேச்சுவார்த்தைகளை அறிவித்தார்.

ஆனால் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை உக்ரைன் திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை என்று அவரது பாதுகாப்பு செயலாளர் எச்சரித்தார். இந்த நிலையில், ட்ரம்ப் ஒரே நேரத்தில் தன்னுடனும் புடினுடனும் பேசுவதே தனது அசல் திட்டமாக இருந்ததாகத் தெரிவித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆதரவைப் பராமரிப்பது என்பது தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...