10 16
உலகம்செய்திகள்

சர்வதேசமே எதிர்பார்த்த முக்கிய சந்திப்பு..! புடினை சந்திக்கப் போகும் ஜெலன்ஸ்கி

Share

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.

குறித்த சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை(15.11.2025) துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெறவுள்ளது.

துருக்கியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த புடின் முன்மொழிந்திருந்தார்.

குறித்த முன்மொழிவுக்கு உக்ரைன் உடன்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கோரிய சிறிது நேரத்திலேயே ஜெலன்ஸ்கி ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள் கொல்லப்படுவது தொடர்வதில் எந்த ஒரு பலனும் இல்லை எனவும் வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன் எனவும் ஜெலன்ஸ்கி குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்

மேலும், இந்த முறை ரஷ்யா, எந்தவொரு சாக்கையும் கூறாது போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...