10 16
உலகம்செய்திகள்

சர்வதேசமே எதிர்பார்த்த முக்கிய சந்திப்பு..! புடினை சந்திக்கப் போகும் ஜெலன்ஸ்கி

Share

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.

குறித்த சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை(15.11.2025) துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெறவுள்ளது.

துருக்கியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த புடின் முன்மொழிந்திருந்தார்.

குறித்த முன்மொழிவுக்கு உக்ரைன் உடன்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கோரிய சிறிது நேரத்திலேயே ஜெலன்ஸ்கி ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள் கொல்லப்படுவது தொடர்வதில் எந்த ஒரு பலனும் இல்லை எனவும் வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன் எனவும் ஜெலன்ஸ்கி குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்

மேலும், இந்த முறை ரஷ்யா, எந்தவொரு சாக்கையும் கூறாது போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...