rtjyd scaled
உலகம்செய்திகள்

கொன்று குவிக்கப்பட்ட 21,000 வாக்னர் கூலிப்படையினர்

Share

கொன்று குவிக்கப்பட்ட 21,000 வாக்னர் கூலிப்படையினர்

கிழக்கு உக்ரைனில் 21,000 வாக்னர் கூலிப்படையினரை கொன்று வீழ்த்தியதாக ஜெலென்ஸ்கி கூறுகிறார்.

ரஷ்யாவின் தனியார் இராணுவ படை என கூறப்படும் கூலிப்படை குழுவான Wagner Group பெரும் இழப்பை சந்தித்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

“ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரைனில் வாக்னர் கூலிப்படை அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. கிழக்கு உக்ரைனில் மட்டும், எங்கள் படைகள் 21,000 வாக்னர் வீரர்களைக் கொன்று குவித்தன’ என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

அதுமட்டுமின்றி, 80,000 வாக்னர் படையினர் போரில் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறினார். ஜெலென்ஸ்கி தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கீவ் விஜயத்தை ஒட்டி ஸ்பானிய ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.

மேலும் பேசிய ஜெலென்ஸ்கி, “ரஷ்யாவில் மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொல்ல விரும்புகிறது. இது புடினுக்கு இது மிகவும் ஆபத்தானது” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

வாக்னர் குழுமத்தின் தலைவரான ப்ரிகோஜின், கிழக்கு உக்ரைனில் உள்ள பக்மத்தை கைப்பற்றும் போரில் பலத்த உயிர்ச்சேதங்கள் குறித்து பலமுறை புலம்பியுள்ளார்.

புட்டினுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டி, ஆட்சி கவிழ்ப்பு முயல்வதற்கு முன்னதாக, போதுமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்காமல் ரஷ்ய இராணுவம் ஏமாற்றியதாக பிரிகோஜின் குற்றம் சாட்டியாதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...