‘அடுத்து நீங்கள் தான்’ – ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்

gallerye 015340202 3099397

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நேற்று முன்தினம் பொது நிகழ்வொன்றில் வைத்து கத்திகுத்துக்கு இலக்கனார். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், தற்போது ஹாரி பாட்டர் கதையை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஜே.கே.ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்து பதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், ‘கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்’ என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Exit mobile version