உலகம்செய்திகள்

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

Share
24 664fde38a6af7
Share

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

ஒவ்வொரு இளம் பெண்ணும் தனது திருமண நாளில் அழகாக இருக்க விரும்புவார்கள். இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இளம்பெண்கள் Weight Loss Diet, அழகு சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல் எடையை குறைக்க இளம் பெண்கள் எடுக்கும் உணவு மற்றும் சிகிச்சை சில நேரங்களில் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு, பிரேசிலில் உடல் எடையை குறைக்க முயன்ற மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரா பெர்னாண்டஸ் கோஸ்டா (Laura Fernández Costa) தனது திருமண நாளுக்கு முன்பு 8 கிலோ எடையை குறைக்க விரும்பினார்.

லாரா தனது உடல் எடையை விரைவில் குறைக்க உதவுவதற்காக அவரது வயிற்றில் ஒரு இரைப்பை பலூன் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறையில், உமிழ்நீர் நிரப்பப்பட்ட ஒரு சிலிகான் பை அடிவயிற்றில் செருகப்பட்டு வயிறு நிறைந்து இருக்கும் உணர்வை உருவாக்குகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

பொறியியலாளரான 31 வயதான லாரா, ஏப்ரல் 26-ஆம் திகதி கிளினிக்கில் இந்த அறுவை சிகிச்சை செய்தார்.

குடும்ப உறுப்பினர்களின் கூறியதன்படி, மறுநாள் அவள் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின்னர் மே முதலாம் திகதி லாரா மற்றொரு கிளினிக்கிற்கு சென்றார். இங்குள்ள மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து பலூனை அகற்றினர்.

இருப்பினும், லாரா கடுமையான வலியால் அவதிப்பட்டு மே 6-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் ஒரு துளை இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

லாராவை திருமணம் செய்யவிருந்த மேத்யூஸ் டர்செட், ‘லாரா உண்மையில் அதிக எடையுடன் இருக்கவில்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தார் மற்றும் 70 கிலோ எடை மட்டுமே இருந்தார். எனினும், அவர் சிகிச்சை பெற்று வந்தார் என கூறினார்.

லாரா மற்றும் மேத்யூஸ் செப்டம்பர் 7-ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...