24 664fde38a6af7
உலகம்செய்திகள்

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

Share

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

ஒவ்வொரு இளம் பெண்ணும் தனது திருமண நாளில் அழகாக இருக்க விரும்புவார்கள். இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இளம்பெண்கள் Weight Loss Diet, அழகு சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல் எடையை குறைக்க இளம் பெண்கள் எடுக்கும் உணவு மற்றும் சிகிச்சை சில நேரங்களில் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு, பிரேசிலில் உடல் எடையை குறைக்க முயன்ற மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரா பெர்னாண்டஸ் கோஸ்டா (Laura Fernández Costa) தனது திருமண நாளுக்கு முன்பு 8 கிலோ எடையை குறைக்க விரும்பினார்.

லாரா தனது உடல் எடையை விரைவில் குறைக்க உதவுவதற்காக அவரது வயிற்றில் ஒரு இரைப்பை பலூன் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறையில், உமிழ்நீர் நிரப்பப்பட்ட ஒரு சிலிகான் பை அடிவயிற்றில் செருகப்பட்டு வயிறு நிறைந்து இருக்கும் உணர்வை உருவாக்குகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

பொறியியலாளரான 31 வயதான லாரா, ஏப்ரல் 26-ஆம் திகதி கிளினிக்கில் இந்த அறுவை சிகிச்சை செய்தார்.

குடும்ப உறுப்பினர்களின் கூறியதன்படி, மறுநாள் அவள் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின்னர் மே முதலாம் திகதி லாரா மற்றொரு கிளினிக்கிற்கு சென்றார். இங்குள்ள மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து பலூனை அகற்றினர்.

இருப்பினும், லாரா கடுமையான வலியால் அவதிப்பட்டு மே 6-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் ஒரு துளை இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

லாராவை திருமணம் செய்யவிருந்த மேத்யூஸ் டர்செட், ‘லாரா உண்மையில் அதிக எடையுடன் இருக்கவில்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தார் மற்றும் 70 கிலோ எடை மட்டுமே இருந்தார். எனினும், அவர் சிகிச்சை பெற்று வந்தார் என கூறினார்.

லாரா மற்றும் மேத்யூஸ் செப்டம்பர் 7-ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...