24 664fccdd0994a
உலகம்செய்திகள்

பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி, 68 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

Share

பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி, 68 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மஷாத் நகரில் தகனம் செய்யப்பட்டது.

இப்ராஹிம் ரைசி பிறந்த அதே மஷாத் நகரத்தில், சமன் அல்-ஹஜ்ஜாஜ் அலி பின் மூசா அல்-ராஜாவின் ஷெரீஃப் ஆலயத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

ரைசியின் இறுதிப் பயணத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு சுமார் 30 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அவர்களது கையில் ஈரானின் கொடியும், ரைசியின் படங்களும் இருந்தன.

உலகெங்கிலும் உள்ள சுமார் 68 நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ரைசிக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இடம்பெற்றுள்ளார். மேலும், கத்தாரின் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சுடானி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈரான் சென்றடைந்தனர்.

தலிபான் துணைப் பிரதமர் முல்லா பரதார், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளும் ரைசிக்கு பிரியாவிடை அளிக்க வந்திருந்தனர்.

ஈரானின் உச்ச தலைவர் Seyyed Ali Hosseini Khamenei தெஹ்ரானில் ஜனாதிபதி ரைசிக்கு தனது கடைசி பிரியாவிடையை வழங்கினார்.

முன்னதாக புதன்கிழமை, இப்ராஹிம் ரைசி மற்றும் பிற அதிகாரிகளின் இறுதிச் சடங்குகள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தலைமையில் தொடங்கியது. அவர் ரைசிக்காக பிரார்த்தனை செய்தார்.

இதனைக் காண நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெஹ்ரானை அடைந்தனர். ஊர்வலத்தில் ஈரான் நாட்டு பிரஜைகள் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, இறந்தவர்களின் சவப்பெட்டிகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டன. இந்த சவப்பெட்டிகள் ஈரானிய கொடியில் சுற்றப்பட்டிருந்தன. இவற்றில் இறந்தவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...