1 5 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலே எங்கள் இலக்கு: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடத்தல்

Share

இஸ்ரேலே எங்கள் இலக்கு: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடத்தல்

பாலஸ்தீனத்தின் காசா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தீவிர போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 52 பேர் பயணம் செய்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து கடத்தியுள்ளனர்.

வானுர்தி மூலம் கப்பல் மேல் தளத்திற்கு வந்த இறங்கிய ஹவதி கிளர்ச்சியாளர்கள் படை, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துளள்ள காணொளி தர்போது சமுக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டு இருந்த போது கேலக்ஸ் லீடர் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹவுதி படையினரின் செயலுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இஸ்ரேலிய கப்பல்கள் எங்களது நியாயமான இலக்கு என்று ஹவதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் எங்கிருந்தாலும், அதன் மீது எங்கள் நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என ஹவதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...