24 667f7cfe0ff26 12
உலகம்செய்திகள்

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி..ஆசிய நாட்டிற்கு வந்தடைந்த விளாடிமிர் புடின்

Share

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி..ஆசிய நாட்டிற்கு வந்தடைந்த விளாடிமிர் புடின்

பிராந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கஜகஸ்தான் நாட்டிற்கு வந்தடைந்தார்.

பெய்ஜிங் தலைமையில் மத்திய ஆசியா, இந்தியா மற்றும் ஈரான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய முகாமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது.

நேற்றைய தினம் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) இதில் பங்கேற்க வந்திருந்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிற்கு வந்து சேர்ந்தார்.

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணிகளை கடினப்படுத்தவும், மூலோபாய மத்திய ஆசிய பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அழுத்தவும் இருநாட்டு தலைவர்களும் முயல்வதாக கூறப்படுகிறது.

மேலும் புடின் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் SCOவை, Eurasia முழுவதும் தங்கள் மூலோபாய நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய மன்றமாக பார்க்கின்றனர்.

புடின் வருகைக்கு முன்பாக, கிரெம்ளின் உதவியாளர் Yury Ushakov ரஷ்ய ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

”SCO என்பது BRICSயின் இரண்டாவது பாரிய சங்கம் என்று நாங்கள் நம்புகிறோம். இவை இரண்டும் புதிய உலக ஒழுங்கின் முக்கிய தூண்கள். இது உலக விவகாரங்களில் உண்மையான பன்முகத்தன்மையை நிறுவும் சூழலில் ஒரு Locomotive ஆகும்” என தெரிவித்தார்.

 

Share
தொடர்புடையது
01 34
செய்திகள்உலகம்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க, இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு ஐஆர்ஜிசி எச்சரிக்கை!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும்...

01 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டணப் பட்டியல்: காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப்...

Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...