R scaled
உலகம்செய்திகள்

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு

Share

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளான பிரிஷ் யூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கே மீண்டும் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்திய வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தன்னுடைய இத்தனை ஆண்டு கால கடின உழைப்பு அனைத்தையும் கைவிட்டு, ‘நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்’ என கண்ணீருடன் அறிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதே சமயம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார்.

இவை இந்திய மல்யுத்த சங்கம் மற்றும் மத்திய பாஜக அரசு மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரிஷ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டதை மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...