Untitled 1 20 scaled
உலகம்செய்திகள்

உலகின் மிகப்பெரிய மர நகரம்!!

Share

உலகின் மிகப்பெரிய மர நகரத்தை உருவாக்க ஸ்வீடன் திட்டமிட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம் வூட் சிட்டி என அழைக்கப்படும் இந்த திட்டத்தை கட்டியெழுப்பவுள்ள Atrium Ljungberg நிறுவனம், உலகில் இதுவரை வேறு எந்த கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படாத அளவிற்கு அதிக மரங்களைப் பயன்படுத்த உள்ளதால், இதனை ‘world’s largest wooden city’ என பெயரிட்டது.

நவீனகட்டுமான திட்டங்களைப் போலவே, மர நகர வீடுகள் அடித்தளத்தில் சில கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தப்படும், ஆனால் அதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

மரத்தாலான கட்டிடங்கள் இலகுவாக இருப்பதால் அவற்றின் அடித்தளமும் சிறியதாக இருக்கும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் அன்னிகா அனஸ்.

மர வீடுகள் அவற்றின் கட்டுமானத்தில் மலிவானதாகவும் சத்தம் குறைவாகவும் இருக்கும். ஆனால், மர கட்டிடங்களின் மிகப்பெரிய கவலை தீ. இதற்காக, வூட் சிட்டியின் கட்டிடங்களில் பல தீ பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படும்.நகரத்தில் ஸ்பிரிங்க்லர் மற்றும் ஃப்ளேம் ரெசிஸ்டண்ட் லேயர் இருக்கும்.

இந்த திட்டம் கான்கிரீட் மற்றும் எஃகு கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது கார்பன் தடயத்தை 40% குறைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

2.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 2,000 வீடுகள், 7,000 அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் இருக்கும்.

இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.43,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஸ்வீடனில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனமான ஏட்ரியம் ஜங்பெர்க் தலைமையில் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2027-ல் நிறைவடையும் என கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...