Untitled 1 20 scaled
உலகம்செய்திகள்

உலகின் மிகப்பெரிய மர நகரம்!!

Share

உலகின் மிகப்பெரிய மர நகரத்தை உருவாக்க ஸ்வீடன் திட்டமிட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம் வூட் சிட்டி என அழைக்கப்படும் இந்த திட்டத்தை கட்டியெழுப்பவுள்ள Atrium Ljungberg நிறுவனம், உலகில் இதுவரை வேறு எந்த கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படாத அளவிற்கு அதிக மரங்களைப் பயன்படுத்த உள்ளதால், இதனை ‘world’s largest wooden city’ என பெயரிட்டது.

நவீனகட்டுமான திட்டங்களைப் போலவே, மர நகர வீடுகள் அடித்தளத்தில் சில கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தப்படும், ஆனால் அதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

மரத்தாலான கட்டிடங்கள் இலகுவாக இருப்பதால் அவற்றின் அடித்தளமும் சிறியதாக இருக்கும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் அன்னிகா அனஸ்.

மர வீடுகள் அவற்றின் கட்டுமானத்தில் மலிவானதாகவும் சத்தம் குறைவாகவும் இருக்கும். ஆனால், மர கட்டிடங்களின் மிகப்பெரிய கவலை தீ. இதற்காக, வூட் சிட்டியின் கட்டிடங்களில் பல தீ பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படும்.நகரத்தில் ஸ்பிரிங்க்லர் மற்றும் ஃப்ளேம் ரெசிஸ்டண்ட் லேயர் இருக்கும்.

இந்த திட்டம் கான்கிரீட் மற்றும் எஃகு கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது கார்பன் தடயத்தை 40% குறைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

2.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 2,000 வீடுகள், 7,000 அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் இருக்கும்.

இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.43,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஸ்வீடனில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனமான ஏட்ரியம் ஜங்பெர்க் தலைமையில் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2027-ல் நிறைவடையும் என கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...